ஆஸ்கர் தம்பதி பராமரிப்பில் இருந்த தர்மபுரி குட்டி யானை திடீரென உயிரிழப்பு

தர்மபுரியில் இருந்து கடந்த 16-ந்தேதி பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமிற்கு 3 மாதமே ஆன குட்டியானை கொண்டுவரப்பட்டது. ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளி பராமரிப்பில் இருந்த குட்டியானை திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.


நீலகிரி: தர்மபுரியிலிருந்து முதுமலை கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 3 மாத யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தாயை பிரிந்து கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 3 மாதமே ஆன ஆண் குட்டியான மீட்கப்பட்டு கடந்த 16-ந்தேதி பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.



அந்த யானை குட்டியை ஆஸ்கர் விருது பெற்ற எலிபன்ட் விஸ்ப்பரெஸ் என்ற ஆவணப்படத்தில் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வரை உற்சாகமாக இருந்த இந்த குட்டி யானை நேற்று மாலை முதல் சோர்வடைந்து காணப்பட்டது.

தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு மருத்துவச் சிகிச்சை அளித்த நிலையில் இன்று அதிகாலை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.



இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் அதன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில் உடலில் கொடுக்கப்பட்ட பால் மற்றும் திரவ உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகாமலிருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது.



இதையடுத்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறை உயர் அதிகாரிகள் இணைந்து இறந்த குட்டி யானைக்கான இறுதிச் சடங்கில் பூஜை செய்தும் மலர்களால் அதன் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....