ஆஸ்கர் தம்பதி பராமரிப்பில் இருந்த தர்மபுரி குட்டி யானை திடீரென உயிரிழப்பு

தர்மபுரியில் இருந்து கடந்த 16-ந்தேதி பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமிற்கு 3 மாதமே ஆன குட்டியானை கொண்டுவரப்பட்டது. ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளி பராமரிப்பில் இருந்த குட்டியானை திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.


நீலகிரி: தர்மபுரியிலிருந்து முதுமலை கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த 3 மாத யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தாயை பிரிந்து கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 3 மாதமே ஆன ஆண் குட்டியான மீட்கப்பட்டு கடந்த 16-ந்தேதி பராமரிப்புக்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது.



அந்த யானை குட்டியை ஆஸ்கர் விருது பெற்ற எலிபன்ட் விஸ்ப்பரெஸ் என்ற ஆவணப்படத்தில் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியினர் பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வரை உற்சாகமாக இருந்த இந்த குட்டி யானை நேற்று மாலை முதல் சோர்வடைந்து காணப்பட்டது.

தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அந்த யானைக்கு மருத்துவச் சிகிச்சை அளித்த நிலையில் இன்று அதிகாலை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.



இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் அதன் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ததில் உடலில் கொடுக்கப்பட்ட பால் மற்றும் திரவ உணவுப் பொருட்கள் செரிமானம் ஆகாமலிருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரிய வந்தது.



இதையடுத்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறை உயர் அதிகாரிகள் இணைந்து இறந்த குட்டி யானைக்கான இறுதிச் சடங்கில் பூஜை செய்தும் மலர்களால் அதன் உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...