சூலூரில் மின்னணு கழிவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி, சூலூர் ஆர்விஎஸ் கல்லூரியில் தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மின்னணு கழிவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது ஆர்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, சூலூர் பேரூராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேரணி குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள், மக்கள் அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...