சூலூரில் மின்னணு கழிவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு!

மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி, சூலூர் ஆர்விஎஸ் கல்லூரியில் தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. மின்னணு கழிவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது ஆர்.வி.எஸ். கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, சூலூர் பேரூராட்சி அலுவலகம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள், இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள் குறித்த விழிபுணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேரணி குறித்துப் பேசிய கல்லூரி மாணவர்கள், மக்கள் அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அந்த கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...