பழனி புதிய மாவட்டத்தில் உடுமலை இணைப்பா? - சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

திண்டுக்கல்லை பிரித்து பழனி தனி மாவட்டமாக உருவாக்கும்பட்சத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையும் பழனியுடன் இணைப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் மக்களிடையே பரபரப்பு நிலவிவருகிறது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனவும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம், பழனி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து பழனியை தலைமை இடமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்க அமைச்சர் சக்கரபாணி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள் பழனியை தனி மாவட்டமாக அறிவித்தால், பழனி மலை, திருமூர்த்தி மலை, ஆனைமலை, கொடைக்கானல் ஆகிய மலைகள் அதற்குள் வரும் பழனி முக்கியமான ஆன்மீக நகரம் என்பதால் இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும் என வலியுறுத்தியதாக உடுமலை பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பழனி மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...