பழனி புதிய மாவட்டத்தில் உடுமலை இணைப்பா? - சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு

திண்டுக்கல்லை பிரித்து பழனி தனி மாவட்டமாக உருவாக்கும்பட்சத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையும் பழனியுடன் இணைப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவலால் மக்களிடையே பரபரப்பு நிலவிவருகிறது.


திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளது எனவும், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து ஒட்டன்சத்திரம், பழனி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து பழனியை தலைமை இடமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்க அமைச்சர் சக்கரபாணி மற்றும் திமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள் பழனியை தனி மாவட்டமாக அறிவித்தால், பழனி மலை, திருமூர்த்தி மலை, ஆனைமலை, கொடைக்கானல் ஆகிய மலைகள் அதற்குள் வரும் பழனி முக்கியமான ஆன்மீக நகரம் என்பதால் இந்துக்களின் ஓட்டுக்களை பெற முடியும் என வலியுறுத்தியதாக உடுமலை பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பழனி மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...