அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்ல தயாராக இருப்பதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அலகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஒரு காளைக்கு 15 நபர்கள் வருவதாகவும், இவர்கள் குடிபோதையில் அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாகவும் இதை தட்டிக் கேட்பவர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதுவே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டியை காண வரும் ஆயிரக்கணக்கானோரில் சிலர், மதுபோதையில் குடியிருப்பு பகுதியில் சென்று மது அருந்துவதும், குடிபோதையில் வீட்டு வாசலில் அலங்கோல நிலையில் படுத்துள்ளனர்.



ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்த பிறகு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதி முழுவதும் மனித கழிவுகளால் நோய் பரவுவதாகவும், கடந்த இரண்டு முறையும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் ஊருக்குள் வந்து விட்டதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் காளைகள் தாக்கியதில் இரண்டு பேர் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோரிடம் ஜல்லிக்கட்டு போட்டி, நடத்தக் கூடாது என மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பட்சத்தில், இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்வதற்கு தயாராக இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...