அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு - திருப்பூர் ஆட்சியரிடம் மனு!

திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினால் ஆதார் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்ல தயாராக இருப்பதாக கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


திருப்பூர்: அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கூடாது என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஊராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அலகுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஒரு காளைக்கு 15 நபர்கள் வருவதாகவும், இவர்கள் குடிபோதையில் அப்பகுதி பெண்கள் உட்பட பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாகவும் இதை தட்டிக் கேட்பவர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இதுவே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாள் அன்று போட்டியை காண வரும் ஆயிரக்கணக்கானோரில் சிலர், மதுபோதையில் குடியிருப்பு பகுதியில் சென்று மது அருந்துவதும், குடிபோதையில் வீட்டு வாசலில் அலங்கோல நிலையில் படுத்துள்ளனர்.



ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்த பிறகு கோவில் மற்றும் குடியிருப்பு பகுதி முழுவதும் மனித கழிவுகளால் நோய் பரவுவதாகவும், கடந்த இரண்டு முறையும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் ஊருக்குள் வந்து விட்டதாகவும், இதனால் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் காளைகள் தாக்கியதில் இரண்டு பேர் காயம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோரிடம் ஜல்லிக்கட்டு போட்டி, நடத்தக் கூடாது என மனு அளித்தும், மாவட்ட நிர்வாகம் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் பட்சத்தில், இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியூர் செல்வதற்கு தயாராக இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத்திடம் மனு அளித்தனர்.

Newsletter

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...