உடுமலை அருகே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு

உடுமலைப்பேட்டை பெரியவாளவாடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், விஷேச நிகழ்வுகளின் போது மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், அமைச்சர் தலையிட்டு மின்இணைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆதிதிராவிடர் மக்களின் சமுதாய நலக்கூடத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஜே.ஜேநகர், பழையூர், சின்னவாளவாடி, பெரியவாளவாடி, மூலனூர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் இல்ல விசேஷங்களுக்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவாளவாடி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. மேலும் கடந்த2001-ல் சந்தை வளாகத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது.



தற்போது பெரியவாளவாடியை சார்ந்த ஆதிதிராவிடர் மக்கள் பெரியவாளவாடி கிராமத்தில் லயன்ஸ் அருகில் அமைந்துள்ள 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடத்தின் முகப்பில் தற்காலிக பந்தல் அமைத்து அதில் காதுகுத்து, கல்யாணம், சீர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டிடத்திலிருந்த மின் இணைப்புகள் பழுதடைந்த அதனை பராமரிப்பு செய்யாமல் சில ஆண்டுகளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவிஷேசங்களுக்கு மின்சார வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தில் முறையிட்டும் பலனில்லை உள்ளூரில் உள்ள பிற மண்டபங்களில் சாதிய காரணங்களால் மண்டபம்வாடகைக்கு தர மறுத்து வருகிறார்கள்.

இந்த நவீன காலத்திலும் தனியார் மற்றும் பொது மண்டபங்களையும் பயன்படுத்த முடியாத சூழலில், தற்போதிருக்கும் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு வழங்கிட ஆவண செய்திடவேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கும் பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...