உடுமலை அருகே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு

உடுமலைப்பேட்டை பெரியவாளவாடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், விஷேச நிகழ்வுகளின் போது மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், அமைச்சர் தலையிட்டு மின்இணைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஆதிதிராவிடர் மக்களின் சமுதாய நலக்கூடத்தில் துண்டிக்கப்பட்டுள்ள மின் இணைப்பை மீண்டும் வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெரியவாளவாடி ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஜே.ஜேநகர், பழையூர், சின்னவாளவாடி, பெரியவாளவாடி, மூலனூர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இவர்களின் இல்ல விசேஷங்களுக்காக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவாளவாடி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. மேலும் கடந்த2001-ல் சந்தை வளாகத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுப் பராமரிப்பின்றி சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது.



தற்போது பெரியவாளவாடியை சார்ந்த ஆதிதிராவிடர் மக்கள் பெரியவாளவாடி கிராமத்தில் லயன்ஸ் அருகில் அமைந்துள்ள 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடத்தின் முகப்பில் தற்காலிக பந்தல் அமைத்து அதில் காதுகுத்து, கல்யாணம், சீர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டிடத்திலிருந்த மின் இணைப்புகள் பழுதடைந்த அதனை பராமரிப்பு செய்யாமல் சில ஆண்டுகளாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவிஷேசங்களுக்கு மின்சார வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தில் முறையிட்டும் பலனில்லை உள்ளூரில் உள்ள பிற மண்டபங்களில் சாதிய காரணங்களால் மண்டபம்வாடகைக்கு தர மறுத்து வருகிறார்கள்.

இந்த நவீன காலத்திலும் தனியார் மற்றும் பொது மண்டபங்களையும் பயன்படுத்த முடியாத சூழலில், தற்போதிருக்கும் சமுதாய நலக்கூடத்திற்கு மின் இணைப்பு வழங்கிட ஆவண செய்திடவேண்டுமென ஊர் பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருக்கும் பதிவு தபாலில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...