உதகையில் மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா - இருளர் இன இளைஞர்கள் உற்சாக நடனம்!

உதகை அருகே சீகூர் வனபகுதியில் உள்ள இருளர் இன பழங்குடியின மக்களின் குல தெய்வமான மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வழிபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருளர் என்ற ஆதிவாசி மக்கள் உதகை அருகே உள்ள ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த மக்கள், தங்களது குலதெய்வமாக மாசி கரிய பண்ட அய்யனை வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலானது அடர்ந்த சீகூர் வன பகுதியில் அமைந்துள்ளது.



மிகவும் கரடு முரடான பாதை வழியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் இருளர் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலுக்கான திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து, 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவில் அமைந்துள்ள சீகூர் வன பகுதிக்கு சென்று கடந்து சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர்.



ஒவ்வொரு நாளும் தங்களது கலாச்சாரப்படி பல்வேறு பூஜைகளை செய்த அந்த மக்கள், இறுதியாக அலங்கரிக்கப்பட்ட புலி வாகனங்களில் எழுந்தருளிய மாசிக் கரிய பண்ட அய்யன் மற்றும் சிறியூர் மாரியம்மனை இருளர் இன இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்தவாறு கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் நடனமாடினர்.



அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொறியை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு நடந்துவந்து வழிபட்டுச் சென்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...