உதகையில் மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா - இருளர் இன இளைஞர்கள் உற்சாக நடனம்!

உதகை அருகே சீகூர் வனபகுதியில் உள்ள இருளர் இன பழங்குடியின மக்களின் குல தெய்வமான மாசி கரிய பண்ட அய்யன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வழிபட்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருளர் என்ற ஆதிவாசி மக்கள் உதகை அருகே உள்ள ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 10 கிராமங்களில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

வனப்பகுதிக்குள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இந்த மக்கள், தங்களது குலதெய்வமாக மாசி கரிய பண்ட அய்யனை வழிபட்டு வருகின்றனர்.

இக்கோவிலானது அடர்ந்த சீகூர் வன பகுதியில் அமைந்துள்ளது.



மிகவும் கரடு முரடான பாதை வழியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு வரும் இருளர் இன மக்கள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இந்தக் கோயிலுக்கான திருவிழாவை நடத்தி வருகின்றனர்.



அதன்படி, இந்த ஆண்டிற்கான கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து, 350 குடும்பங்களை சார்ந்த இருளர் இன மக்கள் குடும்பத்துடன் கோவில் அமைந்துள்ள சீகூர் வன பகுதிக்கு சென்று கடந்து சில நாட்களாக தங்கி பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர்.



ஒவ்வொரு நாளும் தங்களது கலாச்சாரப்படி பல்வேறு பூஜைகளை செய்த அந்த மக்கள், இறுதியாக அலங்கரிக்கப்பட்ட புலி வாகனங்களில் எழுந்தருளிய மாசிக் கரிய பண்ட அய்யன் மற்றும் சிறியூர் மாரியம்மனை இருளர் இன இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்தவாறு கோயில் வளாகத்தில் நீண்ட நேரம் நடனமாடினர்.



அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொறியை வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டனர். கோவில் திருவிழாவை முன்னிட்டு நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கர்நாடகா மாநில பக்தர்களும் கோவிலுக்கு நடந்துவந்து வழிபட்டுச் சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...