வால்பாறை நகராட்சி கூட்டம் - கோடை விழா உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த வார்டு உறுப்பினர்கள்!

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு கவுன்சிலர்கள், மே மாதம் கோடை விழா நடத்த வேண்டும், காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.



கோவை: வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கோடை விழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரம் வள்ளி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில், ஆணையாளர் பாலு முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 21 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வட்டார் பால்ஷ் மற்றும் வேவர்லி பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட காட்சி முனை மாடம் அமைக்க வேண்டும், அனைத்து வார்டு பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், ரேஷன் கடைகளை பராமரிப்பு செய்து தர வேண்டும்,

தெரு விளக்கு பராமரிப்பு பணியை மேற்கொள்ள கூடுதல் மின் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் மே மாதம் கோடை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



இதேபோல், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் அமைத்து யானைகள் சேதப்படுத்திய சத்துணவு மையங்களை சரி செய்து தர வேண்டும், நகராட்சி மார்க்கெட் கடைக்காரர்களுக்கு வாடகை. பொதுமக்களின் வீட்டு வரியை 50% குறைக்க வேண்டும் நல்லமுடி பூஞ்சோலை சுற்றுலா தளத்தில் வாகன நிறுத்துமிடம், கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.

நெடுஞ்சாலை துறையில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி, வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி, சோலையார் நகர் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு சமையல் கூடம் கட்டுதல், மேலாண்மை திட்டம் விரிவாக்க பணியை மேற்கொள்ளுதல்.

தடுப்பு சுவர் கட்டுதல் கழிப்பிட பராமரிப்பு, சத்துணவு மைய பராமரிப்பு, சிறு பாலம் கட்டுதல், கிணறு அமைத்தல். கழிவு நீர் வடிகால் அமைத்தல், குடிநீர் குழாய் பராமரித்தல், பயணிகள் நிழற்குடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...