கோவை சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் கனமழை - 20,000 வாழை மரங்கள் சேதம்!

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் திடீரென காற்றுடன் பெய்த மழை வெளுத்து வாங்கிய நிலையில், வடம்பச்சேரி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரிமலை பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.


கோவை: சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் காற்றுடன் பெய்த மழை காரணமாக 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் வடம்பச்சேரி, செஞ்சேரி புதூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளன.



பயிரிடப்பட்ட வாழைகள் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்நிலையில், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் பகுதிகளில் 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மரங்கள் சேதமடைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுல்தான் பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள் சாய்கண்ணன், தினகரன், மந்திராசலம், வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசாந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...