கோவை சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் கனமழை - 20,000 வாழை மரங்கள் சேதம்!

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் திடீரென காற்றுடன் பெய்த மழை வெளுத்து வாங்கிய நிலையில், வடம்பச்சேரி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரிமலை பகுதிகளில் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.


கோவை: சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் காற்றுடன் பெய்த மழை காரணமாக 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் வடம்பச்சேரி, செஞ்சேரி புதூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டுள்ளன.



பயிரிடப்பட்ட வாழைகள் 10 மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்நிலையில், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் பகுதிகளில் 20,000 வாழை மரங்கள் சேதமடைந்தது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மரங்கள் சேதமடைந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சுல்தான் பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர்கள் சாய்கண்ணன், தினகரன், மந்திராசலம், வடம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசாந்த் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...