உக்கடம் அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்தல் - லாரி உட்பட 8 வாகனங்கள் பறிமுதல்!

உக்கடம் அருகே இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்ல முயன்ற லாரி உட்பட எட்டு வாகனங்களை பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் உக்கடம் அருகே 5 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற 8 வாகனங்களை குடிமைப் பொருள் பழங்கள் துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை, சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் IPS பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் இன்று (25.03.2023) அதிகாலை 05.00 மணியளவில் கோயம்புத்தூர் பகுதிகளில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் 2 குழுவாக பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனிடையே உக்கடம் - செல்வபுரம் சாலையில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி சுமார் 50 கிலோ வீதம் 60 மூட்டையில் என மொத்தம் 3000 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை செய்த போது தெற்கு உக்கடம் அண்ணா நகரை சேர்ந்த அபி என்கின்ற அபிப் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரிய வந்தது. அபி என்கின்ற அபிப் ரஹமான் தலைமறைவாகி உள்ளார். இவர் ஏற்கனவே எட்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துள்ளார்.



இதேபோல், மதுக்கரை மரப்பாலம் அருகே SI கலைச்செல்வன் தலைமையான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த பொழுது அவ்வழியாக வேகமாக வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ வீதம் 40 மூட்டைகளில் சுமார் 2000 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் குனியமுத்தூர் P.K புதூரை சேர்ந்த குட்டி ராஜேந்திரன், அவரது அண்ணன் மகன் சூர்யா மற்றும் வாளையாறை சேர்ந்த சபீர் ஆகிய மூவரும் குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி கள்ளத்தனமாக கேரளாவில் விற்பனை செய்து வரும்படி அனுப்பியதாகவும் தெரியவந்தது.



மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட எட்டு வாகனங்கள் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர் சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாகியுள்ள அபி என்கின்ற அபிப்ரகுமான், குட்டி ராஜேந்திரன், சூர்யா, மற்றும் சபீர் ஆகிய நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...