கோவையில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

கோவை மாவட்டம் வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் மஞ்சு (30). இவர், கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் சென்ற போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை 3 பெண்கள் பறித்துச் சென்றனர்.



கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் தங்க செயினை பறித்துச் சென்ற மூன்று பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டையை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மனைவி மஞ்சு (30). இவர் அந்த பகுதியில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று கருமத்தம்பட்டி நால் ரோட்டில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்தார். அப்போது அந்த பேருந்தில் முககவசம் அணிந்தபடி நின்றிருந்த 3 பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மஞ்சு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற 3 பெண்களை தேடி வருகின்றனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...