கோவையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.



கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பயன்படுத்த முடியாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ராமகிருஷ்ணா மிஷின் அருகில், கார் ஒன்று நேற்று நள்ளிரவு பாலத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். காரில் கோவையை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அசோக் ஆகிய இருவர் பயணித்துள்ளனர்.



இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று கொண்டிருக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் காரை ஓட்டி வந்த சுப்பிரமணி என்பவர், தூக்கத்தில் இருந்ததாகவும் அதனால் விபத்து நிகழ்ந்ததாகவும், மேலும் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் அருகே தடுப்புகள் அமைக்கப்படாததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...