கோவையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.



கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என்.மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பயன்படுத்த முடியாமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் ராமகிருஷ்ணா மிஷின் அருகில், கார் ஒன்று நேற்று நள்ளிரவு பாலத்திற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இருவர் உயிர் தப்பினர். காரில் கோவையை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் அசோக் ஆகிய இருவர் பயணித்துள்ளனர்.



இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று கொண்டிருக்கையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் காரை ஓட்டி வந்த சுப்பிரமணி என்பவர், தூக்கத்தில் இருந்ததாகவும் அதனால் விபத்து நிகழ்ந்ததாகவும், மேலும் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் அருகே தடுப்புகள் அமைக்கப்படாததே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...