கோவை அரசு பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு - போலீஸ் விசாரணை

கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஆர்எஸ் புரத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாவிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபரை சாய்பாபா காலனி போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாநகரில் அடிக்கடி பேருந்து பயணிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி இவரது மனைவி யசோதா (வயது65). இவர் நேற்று மருத்துவமனைக்கு செல்ல கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சாய்பாபா காலனிக்கு செல்ல 11டி என்ற அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது யசோதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்தில் பெண் பயணிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...