கோவை அரசு பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு - போலீஸ் விசாரணை

கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஆர்எஸ் புரத்தை சேர்ந்த மூதாட்டி யசோதாவிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபரை சாய்பாபா காலனி போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை மாநகரில் அடிக்கடி பேருந்து பயணிகளை குறிவைத்து தங்க நகைகளை திருடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோவை ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி இவரது மனைவி யசோதா (வயது65). இவர் நேற்று மருத்துவமனைக்கு செல்ல கோவை பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சாய்பாபா காலனிக்கு செல்ல 11டி என்ற அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது, சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது யசோதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பேருந்தில் பெண் பயணிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...