கோவை விமான நிலையத்தில் ஆபத்துக் கால தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில், ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்தில் ஆட்சியர் முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் (கடத்தல் எதிர்ப்பு மாக்) மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆபத்து (ஹைஜாக்கிங்) ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்படுவது, மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தல், தீவிரவாத நிகழ்வுகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொண்டு பொது மக்களையும் பயணிகளையும் பாதுகாப்பது, மறைந்திருந்து குற்றவாளிகளை தாக்குவது, ஆபத்துக் காலங்களில் எவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்வது, மோப்ப நாய்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.



இதில் CISF காவலர்கள் 135 பேர், AAIயை சேர்ந்த 15 பேர், BCAS யை சேர்ந்த 1 நபர், ATC யை சேர்ந்த 7 பேர், FIRE/AAI யை சேர்ந்த 4 பேர், BDDS போலிஸ் 10 பேர், மாநில காவல்துறையினர் 6 பேர் உட்பட 213 பேர் பங்கேற்றனர்.



இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குனர் சச்சின் தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...

கோவை விமான நிலையம் 5.15 சதவீதம் வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,74...

கோவை விமான நிலையம் 5.15% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைப்பு

கோவை சர்வதேச விமான நிலையம் 2025-26 நிதியாண்டில் 5.15% வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 34,20,745 பேர்...