கோவை விமான நிலையத்தில் ஆபத்துக் கால தடுப்பு மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி!

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் முன்னிலையில், ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்தில் ஆட்சியர் முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் ஆபத்து கால முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளின் (கடத்தல் எதிர்ப்பு மாக்) மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆபத்து (ஹைஜாக்கிங்) ஏற்படும் பொழுது எவ்வாறு செயல்படுவது, மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தல், தீவிரவாத நிகழ்வுகள் ஏற்படும் போது அதனை எவ்வாறு எதிர்கொண்டு பொது மக்களையும் பயணிகளையும் பாதுகாப்பது, மறைந்திருந்து குற்றவாளிகளை தாக்குவது, ஆபத்துக் காலங்களில் எவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொள்வது, மோப்ப நாய்களை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.



இதில் CISF காவலர்கள் 135 பேர், AAIயை சேர்ந்த 15 பேர், BCAS யை சேர்ந்த 1 நபர், ATC யை சேர்ந்த 7 பேர், FIRE/AAI யை சேர்ந்த 4 பேர், BDDS போலிஸ் 10 பேர், மாநில காவல்துறையினர் 6 பேர் உட்பட 213 பேர் பங்கேற்றனர்.



இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும் விமான நிலையத்தில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குனர் சச்சின் தேவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...