ஹோலி முடிந்து திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் - காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு!

வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.



திருப்பூர்: ஹோலி பண்டிகை முடிந்து திருப்பூருக்கு திரும்பிவரும் வடமாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான சில வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மேலும் ஹோலி பண்டிகை என்பதால் மீதம் இருந்த வடமாநில தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பண்டிகைக்காக சென்றிருந்தனர்.



இந்நிலையில், பண்டிகை முடிந்து தற்போது வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறை சார்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



வடமாநில தொழிலாளர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்திய போலீசார், அவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் குறித்தும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...