பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 7 சவரன் நகைக் கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வேலுச்சாமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்வேலுச்சாமி (வயது82). இன்று அதிகாலையில் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பெரிய நாயகிஇருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வேலுச்சாமி, எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடினர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வேலுச்சாமி அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



மேலும், அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...