பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 7 சவரன் நகைக் கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வேலுச்சாமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்வேலுச்சாமி (வயது82). இன்று அதிகாலையில் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பெரிய நாயகிஇருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வேலுச்சாமி, எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடினர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வேலுச்சாமி அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



மேலும், அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...