பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் 7 சவரன் நகைக் கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வேலுச்சாமி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் காலனியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்வேலுச்சாமி (வயது82). இன்று அதிகாலையில் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பெரிய நாயகிஇருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.



அப்போது ஆள்நடமாட்டம் இருப்பதை உணர்ந்த வேலுச்சாமி, எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் இருந்து வெளியில் ஓடினர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 7 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வேலுச்சாமி அளித்த தகவலின்பேரில், அங்கு விரைந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



மேலும், அதே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...