பொள்ளாச்சி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகார் - தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அருகே நாலாமூல சுங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற வேங்கடபதி பெருமாள்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள நாலமூல சுங்கம் பகுதியில் விஸ்வகர்மா சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வரும் வேங்கடபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் வழித்தடத்தையும் கோயில் அருகே உள்ள பாலாற்றங்கரை நீர் வழி தடத்தை தனியார் தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிகரமித்து வழித்தடத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை அருகில் உள்ள தனியார் தோட்டத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



மேலும், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...