பொள்ளாச்சி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகார் - தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அருகே நாலாமூல சுங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற வேங்கடபதி பெருமாள்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள நாலமூல சுங்கம் பகுதியில் விஸ்வகர்மா சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வரும் வேங்கடபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் வழித்தடத்தையும் கோயில் அருகே உள்ள பாலாற்றங்கரை நீர் வழி தடத்தை தனியார் தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிகரமித்து வழித்தடத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை அருகில் உள்ள தனியார் தோட்டத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



மேலும், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...