பொள்ளாச்சி அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு புகார் - தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி அருகே நாலாமூல சுங்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற வேங்கடபதி பெருமாள்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள நாலமூல சுங்கம் பகுதியில் விஸ்வகர்மா சமூகத்தினர் குலதெய்வமாக வணங்கி வரும் வேங்கடபதி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இந்த கோயிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் வழித்தடத்தையும் கோயில் அருகே உள்ள பாலாற்றங்கரை நீர் வழி தடத்தை தனியார் தோட்டத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிகரமித்து வழித்தடத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.



இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கோயிலுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை அருகில் உள்ள தனியார் தோட்டத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.



மேலும், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கோவில் நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...