கூடலூரில் குட்டிகளுடன் வந்த யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கூடலூர் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



இந்த நிலையில் அத்திக்குன்னு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் இன்று மாலை காட்டு யானை கூட்டம் ஒன்று திடிரென புகுந்தன. அதனை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் பதறியடித்து ஓடினர்.

யானை கூட்டம் வருகையால் தேயிலை பறிப்பு வேலை பாதிக்கபட்டது. இதனையடுத்து அச்சமடைந்துள்ள தோட்ட தொழிலாளர்கள், காட்டு யானை கூட்டத்தை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி உள்ளதால் யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...