கூடலூரில் குட்டிகளுடன் வந்த யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கூடலூர் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



இந்த நிலையில் அத்திக்குன்னு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் இன்று மாலை காட்டு யானை கூட்டம் ஒன்று திடிரென புகுந்தன. அதனை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் பதறியடித்து ஓடினர்.

யானை கூட்டம் வருகையால் தேயிலை பறிப்பு வேலை பாதிக்கபட்டது. இதனையடுத்து அச்சமடைந்துள்ள தோட்ட தொழிலாளர்கள், காட்டு யானை கூட்டத்தை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி உள்ளதால் யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...