கூடலூரில் குட்டிகளுடன் வந்த யானைகளால் தொழிலாளர்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.


நீலகிரி: கூடலூர் பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் குட்டியுடன் உலா வந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.



இந்த நிலையில் அத்திக்குன்னு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் இன்று மாலை காட்டு யானை கூட்டம் ஒன்று திடிரென புகுந்தன. அதனை கண்டு வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் பதறியடித்து ஓடினர்.

யானை கூட்டம் வருகையால் தேயிலை பறிப்பு வேலை பாதிக்கபட்டது. இதனையடுத்து அச்சமடைந்துள்ள தோட்ட தொழிலாளர்கள், காட்டு யானை கூட்டத்தை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி உள்ளதால் யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் எனவே பகல் மற்றும் இரவு நேரங்களில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...