கோவையில் பிரபல அரிசி கடத்தல் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கோவை உக்கடத்தில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,250கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நிஜாமூதின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனிலிருந்து சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதாக பொள்ளாச்சி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்து போது, 45 கிலோ வீதம் 50 மூட்டைகளில் சுமார் 2,250 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான போத்தனூர், திருமறை நகரை சேர்ந்த நிஜாம் (எ) நிஜாமூதீன் என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், நிஜாமுதீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணையை வழங்கினார்.

அதன்படி இன்று கோவை மத்திய சிறையில் உள்ள நிஜாமுதீனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை சார்வு செய்யப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...