கோவையில் பிரபல அரிசி கடத்தல் வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கோவை உக்கடத்தில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,250கிலோ ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைதான நிஜாமூதின் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: உக்கடம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2டன் ரேசன் அரிசியை குடிமைப் பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடம் ஜிஎம் நகரில் ஜபருல்லா என்பவருக்கு சொந்தமான குடோனிலிருந்து சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தப்படுவதாக பொள்ளாச்சி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்து போது, 45 கிலோ வீதம் 50 மூட்டைகளில் சுமார் 2,250 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளரான போத்தனூர், திருமறை நகரை சேர்ந்த நிஜாம் (எ) நிஜாமூதீன் என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், நிஜாமுதீனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணையை வழங்கினார்.

அதன்படி இன்று கோவை மத்திய சிறையில் உள்ள நிஜாமுதீனுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை சார்வு செய்யப்பட்டது.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...