பட்ஜெட் அறிவிப்புகளை வரவேற்று கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கல்!

பட்ஜெட்டில் கோவை மாவட்டத்திற்கு நவீன செம்மொழி பூங்கா மற்றும் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ஆகிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பீளமேடு அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.


கோவை: தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை மற்றும் கோவையில் நவீன செம்மொழி பூங்கா, மெட்ரோ ஆகிய அறிவிப்புகளை வரவேற்று மாநகர் மாவட்ட திமுக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், மகளிர் உரிமை தொகை மாதம் 1000 ரூபாய் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், கோவையில் நவீன செம்மொழி பூங்கா, கோவைக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மெட்ரோ ரயில் திட்டம் போன்ற எண்ணற்ற புதிய திட்டங்களை இன்று பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி, கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் நா. கார்த்திக் வழிகாட்டுதலின் படி பீளமேடு ராதாகிருஷ்ணன் மில் சிக்னல் அருகே திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பீளமேடு பகுதி கழக செயலாளர் துரை.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட்ட கழக செயலாளர்கள் சபரி தன்ராஜ், ஆ. மாடசாமி, மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால், பகுதி கழக நிர்வாகிகள் பூவை துரைசாமி, பந்தல் ரவி, ஜெயராஜ், லக்ஷ்மி

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இரா. தனபால், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கா. மணிகண்டன், வட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...