குறிச்சி அரசுப்பள்ளியை மேம்படுத்தக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிந் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும், அப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்க வேண்டும், ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்தத்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினரும் அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் பேசியதாவது, இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அரசாங்கம் பள்ளியை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம்.

மேலும் இப்பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் இப்பள்ளியின் அருகிலேயே பலரும் மது அருந்திவிட்டு செல்வதால் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக இப்பள்ளியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...