குறிச்சி அரசுப்பள்ளியை மேம்படுத்தக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிந் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும், அப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்க வேண்டும், ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்தத்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினரும் அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் பேசியதாவது, இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அரசாங்கம் பள்ளியை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம்.

மேலும் இப்பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் இப்பள்ளியின் அருகிலேயே பலரும் மது அருந்திவிட்டு செல்வதால் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக இப்பள்ளியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...