குறிச்சி அரசுப்பள்ளியை மேம்படுத்தக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிந் பேசிய மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


கோவை: குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை மேம்படுத்த வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளியின் உள்கட்டமைப்பை சீரமைக்க வேண்டும், அப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், விளையாட்டு மைதானத்தைச் சீரமைக்க வேண்டும், ஏற்கனவே இருந்த பேருந்து நிறுத்தத்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சியினரும் அப்பகுதி பொதுமக்களும் பங்கேற்றனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன் பேசியதாவது, இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அரசாங்கம் பள்ளியை மேம்படுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே இதற்கு காரணம்.

மேலும் இப்பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் இப்பள்ளியின் அருகிலேயே பலரும் மது அருந்திவிட்டு செல்வதால் மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக இப்பள்ளியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி இப்பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...