கோவையில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு - பிக்பாக்கெட் கொள்ளையன் கைது

கோவையில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த பிக்பாக்கெட் திருடன் செல்வபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதி சேர்ந்தவர் இளம் பெண் யாமினி (வயது22). இவர் காந்திபுரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் அவர் மேட்டுப்பாளையம் பேருந்தில் சென்றுள்ளார். அப்பொழுது அவரின் பேக்கை யாரோ இழுப்பது போன்று உணர்ந்துள்ளார்.

பேருந்தில் இருந்து ஒரு நபர் அவசர அவசரமாக இறங்கி சென்றிருக்கின்றார். அந்த பெண் தனது பேக்கை பார்த்த பொழுது அதில் வைத்திருந்த செல்போன் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அருகாமையில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த பொழுது, செல்வபுரத்தை சேர்ந்த ஸ்டாலின் என்ற நபர் செல்போனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார் வழிப்பறி செய்யப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மீது உக்கடம் காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...