தாராபுரம் அருகே 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை - மீண்டும் தொடங்கி வைத்த அமைச்சர்

தாராபுரம் அருகே ஆய்கவுண்டன்பாளையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண் பூண்டி ஊராட்சி ஆய்கவுண்டன்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



இதனை அறிந்த மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உடனடியாக ஆயி கவுண்டன்பாளையம் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையை பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று பேருந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது.



இந்த சேவையை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பேருந்து சேவை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து வேளாண்பூண்டி ஊராட்சியில் உள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...