தாராபுரம் அருகே 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பேருந்து சேவை - மீண்டும் தொடங்கி வைத்த அமைச்சர்

தாராபுரம் அருகே ஆய்கவுண்டன்பாளையத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று மீண்டும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளாண் பூண்டி ஊராட்சி ஆய்கவுண்டன்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



இதனை அறிந்த மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி உடனடியாக ஆயி கவுண்டன்பாளையம் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு உள்ள பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையை பொதுமக்களை நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று பேருந்து சேவை மீண்டும் துவங்கப்பட்டது.



இந்த சேவையை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் பேருந்து சேவை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து வேளாண்பூண்டி ஊராட்சியில் உள்ள சுண்டக்காம்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...