கோவையில் சரக்கு வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு?

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ராம்பாபு என்பவரது வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. இவர் சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அவரது வாகனம் தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.



ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

வாகனத்தை தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தில் ராம்பாபு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...