கோவையில் சரக்கு வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு?

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ராம்பாபு என்பவரது வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. இவர் சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அவரது வாகனம் தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.



ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

வாகனத்தை தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தில் ராம்பாபு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...