கோவையில் சரக்கு வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு?

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ராம்பாபு என்பவரது வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. இவர் சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அவரது வாகனம் தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.



ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

வாகனத்தை தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தில் ராம்பாபு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...