கோவையில் சரக்கு வாகனத்திற்கு மர்மநபர்கள் தீ வைப்பு?

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் ராம்பாபு என்பவரது வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு. இவர் சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டுத் தூங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் அவரது வாகனம் தீ பிடித்து எரிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.



ஆனால் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமானது.

வாகனத்தை தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துடியலூர் காவல் நிலையத்தில் ராம்பாபு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...