தாராபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் - உயிர் பலி ஏற்பட வாய்ப்பு!

திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் தாராபுரம் டவுன் கொட்டாப்புள்ளி பாளையம் பிரிவு அருகே கழிவு நீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் 3 மாதமாகியும் மூடப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் 3 மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராபுரம் டவுன் கொட்டாப்புள்ளி பாளையம் பிரிவு அருகில் திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கல் ஆகியவை சேதமடைந்து காணப்பட்டது.

இதனை சரி செய்வதற்காக திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் பாதி வழி மறிக்கப்பட்டு, பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளமானது 3 மாதங்களாகியும் இதுவரை மூடப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

சாலையில் பாதி வழி மறிக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது சிறிதும் தெரிவதில்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை மாநில நெடுஞ்சாலை துறையினர் சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்து வருவதாகவும், அவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டால் காவல்துறையினர் விபத்து வழக்கு பதிவு செய்யும் பொழுது மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளையும் குற்றவாளிகளாக சேர்த்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்குவதில் பாதி தொகையை மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் செலுத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் புலன்விசாரணைக்கு பின்னிட்டு தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கையில் வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...