தாராபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் - உயிர் பலி ஏற்பட வாய்ப்பு!

திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் தாராபுரம் டவுன் கொட்டாப்புள்ளி பாளையம் பிரிவு அருகே கழிவு நீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் 3 மாதமாகியும் மூடப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் 3 மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராபுரம் டவுன் கொட்டாப்புள்ளி பாளையம் பிரிவு அருகில் திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் பக்கவாட்டில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கல் ஆகியவை சேதமடைந்து காணப்பட்டது.

இதனை சரி செய்வதற்காக திருப்பூர் - திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் பாதி வழி மறிக்கப்பட்டு, பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்நிலையில் இந்த பள்ளமானது 3 மாதங்களாகியும் இதுவரை மூடப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

சாலையில் பாதி வழி மறிக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இந்த தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது சிறிதும் தெரிவதில்லை என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை மாநில நெடுஞ்சாலை துறையினர் சிறிதும் பொருட்படுத்தாமல் இருந்து வருவதாகவும், அவ்வாறு விபத்துக்கள் ஏற்பட்டால் காவல்துறையினர் விபத்து வழக்கு பதிவு செய்யும் பொழுது மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளையும் குற்றவாளிகளாக சேர்த்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்குவதில் பாதி தொகையை மாநில நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் செலுத்துவதற்கு வழிவகை செய்யும் வகையில் புலன்விசாரணைக்கு பின்னிட்டு தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கையில் வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...