கோவையில் வீடுகளில் தங்க நகைகள் திருடிய வாலிபர் கைது

கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்துத் தங்க நகைகளைக் கொள்ளையடித்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அன்பு(33) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: விநாயகபுரம், கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட விநாயகபுரம், கணபதி மாநகர், காந்தி மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் மோகன், நந்தகுமார், ராஜேந்திரன், பிரகாஷ், தினேஷ், ஆகியோர் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி செருப்பனையூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் அன்பு (33) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரவணம்பட்டி பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அன்பு தான் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து தங்க நகைகளை மீட்டு வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...