கோவையில் வீடுகளில் தங்க நகைகள் திருடிய வாலிபர் கைது

கோவை சரவணம்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்துத் தங்க நகைகளைக் கொள்ளையடித்த திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அன்பு(33) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: விநாயகபுரம், கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட விநாயகபுரம், கணபதி மாநகர், காந்தி மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் மோகன், நந்தகுமார், ராஜேந்திரன், பிரகாஷ், தினேஷ், ஆகியோர் அடங்கிய தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி செருப்பனையூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் அன்பு (33) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சரவணம்பட்டி பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது அன்பு தான் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து தங்க நகைகளை மீட்டு வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...