கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு - 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ!

கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் மங்கலூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனிடையே, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, பெரோஸ், உமர்பாரூக், அசாரூதீன் உள்ளிட்டோரை கோவை அழைத்துவந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாக கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தேசிய முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...