கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு - 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ!

கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் மங்கலூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனிடையே, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, பெரோஸ், உமர்பாரூக், அசாரூதீன் உள்ளிட்டோரை கோவை அழைத்துவந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாக கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தேசிய முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...