வால்பாறை நகராட்சியில் மகளிர் தின கொண்டாட்டம் - உற்சாகமாக கொண்டாடிய பெண்கள்!

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை வால்பாறை நகராட்சியில், நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பெண் ஊழியர்கள் இணைந்து கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு நகராட்சி மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் பெண்கள் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வால்பாறை உள்பட பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை பெண்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை நகராட்சியில் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி ஊழியர்கள், தொண்டு நிறுவன பெண்கள் ஆகியோர் இணைந்து நகராட்சி வளாகத்தில் மகளிர் தினத்தை கொண்டாடினர்.



இதில், பெண்களுக்கு கோலம் வரைதல் போட்டி நடத்தப்பட்டு, நன்றாக கோலம் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...