கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகே பயங்கர தீ விபத்து - புகை மூட்டத்தால் பரபரப்பு

கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சிமெண்ட் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



கோவை: கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் காலை நேரங்களில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.



இந்நிலையில், மீன் மார்க்கெட் அருகே அப்பார்ட்மென்ட் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குடோனில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இதற்காக இரும்பு தகர ஓடுகளையும் அகற்றி தீயை முழுமையாக அணைத்தனர். இதனால், மீன் மார்க்கெட்டுகுள் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...