கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகே பயங்கர தீ விபத்து - புகை மூட்டத்தால் பரபரப்பு

கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சிமெண்ட் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



கோவை: கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் காலை நேரங்களில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.



இந்நிலையில், மீன் மார்க்கெட் அருகே அப்பார்ட்மென்ட் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குடோனில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இதற்காக இரும்பு தகர ஓடுகளையும் அகற்றி தீயை முழுமையாக அணைத்தனர். இதனால், மீன் மார்க்கெட்டுகுள் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...