கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகே பயங்கர தீ விபத்து - புகை மூட்டத்தால் பரபரப்பு

கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சிமெண்ட் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



கோவை: கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் காலை நேரங்களில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.



இந்நிலையில், மீன் மார்க்கெட் அருகே அப்பார்ட்மென்ட் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குடோனில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இதற்காக இரும்பு தகர ஓடுகளையும் அகற்றி தீயை முழுமையாக அணைத்தனர். இதனால், மீன் மார்க்கெட்டுகுள் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...