கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனை கொன்ற தொழிலாளி - பரபரப்பு!

கோவை துடியலூர் அருகே மதுபோதையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனை தலையில் கல்லைபோட்டு கொன்று விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த ரமேஷ் (51) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: துடியலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பன் தலையில் கல்லைபோட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருபவர் முகமது பாசில்(28). இவரது மனைவி பண்ணாரி(27). இருவரும் தினமும் குப்பை பொறுக்கி அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தெருவோரங்களில் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் 51 வயதான ரமேஷ் என்பவர் பழக்கமாகி உள்ளார். இவர்கள் தினமும் குப்பை பொறுக்கி அதன்மூலம் வரும் வருமானத்தில் இரவில் மது அருந்தி வந்துள்ளனர்.

நேற்றிரவு முகமது பாசிலும், ரமேஷும் மது அருந்திவிட்டு உறங்கிய போது, முகமது பாசில் ரமேஷை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுத்த ரமேஷை, முகமது பாசில் அசிங்கமாகத் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரத்திலிருந்த ரமேஷ் இன்று அதிகாலை 2 மணியளவில் முகமது பாசில் தூங்கிக்கொண்டிருந்த போது, கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு, துடியலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த முகமது பாசில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனின் தலையில் கல்லைபோட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...