கோவை அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனை கொன்ற தொழிலாளி - பரபரப்பு!

கோவை துடியலூர் அருகே மதுபோதையில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனை தலையில் கல்லைபோட்டு கொன்று விட்டு காவல்நிலையத்தில் சரணடைந்த ரமேஷ் (51) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: துடியலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பன் தலையில் கல்லைபோட்டு கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

துடியலூர் பகுதியில் குப்பை பொறுக்கும் வேலை செய்து வருபவர் முகமது பாசில்(28). இவரது மனைவி பண்ணாரி(27). இருவரும் தினமும் குப்பை பொறுக்கி அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தெருவோரங்களில் தங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் 51 வயதான ரமேஷ் என்பவர் பழக்கமாகி உள்ளார். இவர்கள் தினமும் குப்பை பொறுக்கி அதன்மூலம் வரும் வருமானத்தில் இரவில் மது அருந்தி வந்துள்ளனர்.

நேற்றிரவு முகமது பாசிலும், ரமேஷும் மது அருந்திவிட்டு உறங்கிய போது, முகமது பாசில் ரமேஷை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு மறுத்த ரமேஷை, முகமது பாசில் அசிங்கமாகத் திட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரத்திலிருந்த ரமேஷ் இன்று அதிகாலை 2 மணியளவில் முகமது பாசில் தூங்கிக்கொண்டிருந்த போது, கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு, துடியலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த முகமது பாசில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த நண்பனின் தலையில் கல்லைபோட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...