தாராபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - கோவில் பூசாரி பலி!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த கோவில் பூசாரியான சோமசுந்தரம் (57), தனது மனைவியுடன் உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் சோமசுந்தரம் உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கல் மோதிக் கொண்ட விபத்தில் கோவில் பூசாரி பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (57). கோவில் பூசாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள் இருவரும் இரவு இருசக்கர வாகனத்தில், உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செலாம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (18) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சோமசுந்தரம் வாகனம் மீது மோதியது.

இதில் பூசாரி சோமசுந்தரம் அவரது மனைவி தனலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கோகுலும் கீழே விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூசாரி சோமசுந்தரம் உயிரிழந்தார். அவர் மனைவி தனலெட்சுமி மற்றும் கோகுல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...