கோவை டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் - தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை!

கோவையில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவில்பாளையம் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காவல்துறை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகத் தெரிவித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த எண்ணை ட்ராக் செய்து விசாரித்த போது தொலைப்பேசியில் அழைத்தவர் விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர்(51) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வெளியே வந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு வீசப் போவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...